வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?

2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­வது ? இந்­தக் கேள்வி பல மட்­டங்­க­ளி­லும் தலை­தூக்­கி­யி­ருந்­தது. தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாவட்­டக் கிளை அவ­சர அவ­ச­ர­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­திரா­சாவை முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக அறி­வித்­தது.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனோ, மாவையை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­விக்­க­வில்லை என்று கூறி­னார். மறு­பு­றம், அப்­போது மேடைப்­பேச்­சா­ள­ராக இருந்த ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ ­ரனை நிறுத்­து­வதே தனது திட்­டம் என்­ப­தைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யினருக்கும் விக்­னேஸ்­வ­ர­னில் விருப்­பம் இல்லை. மாவையே வேண்­டும் என்று மல்­லுக் கட்டி நின்­றார்­கள். ‘பபுள்­கம்’ போன்று இந்த விட­யம் ஈய்ந்து – இழு­பட்­டுச் சென்­றது. சம்­பந்­தன், சுமந்­தி­ரன் (பின்னாளில் சுமந்திரன் தானும் விக்கியை முழு மனதோடு ஆதரிக்கவில்லை என்று சொன்னார்) அணி தவிர்ந்த ஏனை­யோர், விக்­கியை எதிர்த்து நின்­ற­னர். ஆனால், இறு­திக் கட்­டத்­தில் மாவை, தான் முத­ல­மைச்­சர் பத­விக்­குப் போட்­டி­யி­ட­வில்லை என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் கூட்­டத்­தில் பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்.

விக்­னேஸ்­வ­ர­னுக்கு வழி திறந்­தது. சம்­பந்­த­ன் நினைத்­தது நிறை­வே­றி­யது. கதாப்­பி­ர­சங்­கம் செய்து கொண்­டி­ருந்­த­வரை, வலிந்து அர­சி­ய­லுக்கு இழுத்து வந்து விட்­ட­னர்.

அதே ஆரம்­பப் புள்ளி
இப்­போ­தும், பிரச்சினை அதே ஆரம்பப் புள்­ளி­யில், வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­ வது என்ற கேள்­வி­யு­டன் வந்து நிற்­கின்­றது. மீண்­டும், மாவை., விக்கி போட்­டியே. ஆனால் கடந்த தடவை, மாவையை ஆத­ரித்த கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள், இந்­தத் தடவை அவரை ஆத­ரிக்­கத் தயா­ரில்லை. சுமந்­தி­ரனோ, இப்­போது விக்­கியை விரட்டி அடிப்­பதே தனது குறிக்­கோள் என்ற நிலை­யில் இருக்­கின்­றார்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனோ அமை­தி­யாக இருக்­கின்­றார். 2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லின்­போ­தும், மாவையா ? விக்­கியா ? என்ற கேள்வி எழுந்து மக்­க­ளைக் குழப்­பிக் கொண்­டி­ருந்த சம­யத்­தி­லும், அவர் அமை­தி­யா­கவே இருந்­தார். இப்­போ­தும் அவர் அமை­தி­யா­கவே இருக்­கின்­றார். தான் எடுத்த முடிவை, நினைத்­ததை நோக்கி ஏனை­யோரை நகர்த்­து­வ­தில் சம்­பந்­தன் வலு கில்­லாடி. அதற்கு அவ­ரது அமைதிகாப்பு பாணி நன்றாகவே கைகொ­டுக்­கும்.

ஆனால், இப்­போது சம்­பந்­த­னால் அவ்­வாறு செய்ய முடி­யுமா என்­பது மிகப் பெரிய கேள்வியே. கட்­சி­யின் கட்­டுப்­பாடு சம்­பந்­தனை விட்­டுக் கைமீ­றி­விட்­டது. சம்­பந்­தன் சொல்­வ­தைச் செய்­யும் அள­வுக்கு கட்சி இல்லை. ஏன் சுமந்­தி­ரனே இல்லை. இப்­போ­தைய சூழ­லில் சம்­பந்­தன் தனி­ம­ர­மா­கவே நிற்­கின்­றார். இதற்கு ஆகப் பிந்­திய உதா­ர­ணம், கூட்­ட­மைப்­பின் ஈ.பி.டி.பியு­ட­னான நெருக்கம்.

சம்­பந்­தனை மீறிய முடிவு
உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் கார­ண­மாக சபை­க­ளில் தொங்கு நில­மையே ஏற்­பட்­டி­ருந்­தது. ஆட்சி அமைப்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் கொழும்­பில் பெப்­ர­வரி மாதம் மூன்­றாம் வாரத்­தில் நடந்­தது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­பது பற்றிப் பேசப்பட்டது. உடனே சுமந்­தி­ ரன், அவர்­கள் அயோக்­கி­யர்­கள் என்று சாரப்­பட பதி­ல­ளித்­தி­ருக்­கின்­றார்.

அதற்கு சம்­பந்­தனோ, ஈ.பி.டி.பியி­னர் அதை­விட அயோக்­கி­யர்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றார். ஈ.பி.டி.பியு­டனோ, பிள்­ளை­யா­னின் கட்­சி­யு­டனோ, கூட்­ட­மைப்பு கூட்டு வைப்­பதை சம்­பந்­தன் விரும்­ப­வில்லை. ஆனால் நடந்­தது என்ன ? சம்­பந்­த­னின் முடிவை எதிர்த்து, ஈ.பி.டி.பியு­டன் பேச்சு நடத்­தி­னார்­கள் மாவை.சேனா­தி­ரா­சா­வும், சுமந்­தி­ர­னும்.

சம்­பந்­த­னின் நிலமை இது­தான். இதை சுமந்­தி­ரன், நாடா­ளு­மன்­றக் கட்ட­டத் தொகு­தி­யில் வைத்து கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வ­ரி­ட­மும் பகிர்ந்­தி­ருக்­கின்­றார்.

‘‘ஐயா (சம்­பந்­தன்) திரும்­ப­வும் விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தவே எண்­ணு­கின்­றார்­போல் இருக்­கின்­றது’’ என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் சுமந்­தி­ர­னி­டம் கூற, ‘‘இல்லை அப்­ப­டி­யி­ருக்­காது. விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­னால் தமிழ் அர­சுக் கட்சி அதனை எதிர்க்­கும்’’ என்று சுமந்­தி­ரன் பதி­ல­ளித்­தி­ருக்­கின்­றார். ‘‘சம்­பந்­தன் தமிழ் அர­சுக் கட்சி இல்­லையா’’ என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் கேள்வி எழுப்ப, ‘‘அவ­ரைத் தவிர கட்சியி லுள்ள மற்ற எல்­லோ­ரும் அதனை எதிர்ப்­போ’’ என்று கூறி­யி­ருக்­கின்­றார்.

தமிழ் அர­சுக் கட்சி முன்வைத் துள்ள மாவை­யின் தெரிவை சம்­பந்­தன் ஏற்­றுக் கொள்­வாரா என்­பது மறு­பு­றம் எழும் கேள்வி. 2013ஆம் ஆண்டே மாவையை, சம்­பந்­தன் நிரா­க­ரித்­தி­ருந்­தார். வடக்கு முதல்­வர் பத­விக்கு மாவை. தகு­தி­யா­ன­வர் இல்லை என்று அவர் பகி­ரங்­க­மா­கவே கட்­சிக் கூட்­டத்­தில் கூறி­யி­ருந்­தார். 2013ஆம் ஆண்டு சுமந்­தி­ரன் அவ­ரது தெரி­வாக இருந்­தா­லும், அப்­போது அவரை நிறுத்­து­வதை சம்­பந்­தன் அவ்­வ­ள­வாக விரும்­பி­யி­ருக்­க­வில்லை.

விக்­கி­யின் பய­ணம்
இப்­ப­டி­யா­ன­தொரு இக்­கட்டு நிலை­யில், கூட்­ட­மைப்­பின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­ப­தில் தமிழ் அர­சுக் கட்சி பிள­வுண்டு போகப் போவது என்­பது நிச்சயம்.

‘‘கூட்­ட­மைப்பே இல்லை. பின்­னர் அங்­கி­ருந்து எனக்கு போட்­டி­யிட எப்­படி எனக்கு அழைப்­பு­வ­ரும்’’ என்ற விக்­னேஸ்­வ­ ர­னின் ஊடக அறிக்கைக் கேள்வி, அவர் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டப் போவ­தில்லை என்­பதை எடுத்­தி­யம்­பி­யுள்­ளது. ஆனால், மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு விக்­னேஸ்­வ­ரன் விரும்­பு­ கின்­றார். மக்­க­ள­தும், கட­வு­ளினதும் பெய­ரா­லும் அதைக் கோடிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.

முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிடாவிட்­டால், எந்த அணி­யில் இறங்­கு­வார். அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில், தமிழ் அர­சுக் கட்­சியை கழற்­றி­விட்டு, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், கூட்­டணி, காங்­கி­ரஸ் என்று புதிய கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டு­வ­தற்கே விரும்­புகின் றார்.
முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக வடக்­கில் போட்­டி­யி­டு­வ­தற்கு இந்­தி­யா­வின் ஆசிர்­வா­த­மும், அனு­ச­ர­ணை­யும் தேவை என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரி­யும். அதற்­கான காய் நகர்த்­த­லுக்­கா­கவே இப்­போது இந்­தி­யா­வுக்­கும் சென்­றி­ருக்­கின்­றார்.

முத­ல­மைச்­ச­ரின் குரு, பிரே­மா­னந்த சுவா­மி­கள். விராலி மடத்­தி­லுள்ள அவ­ரது ஆச்­சி­ர­மத்­துக்கு அவ்வப்போது சென்று வரு­ப­வர் விக்­னேஸ்­வ­ரன். இம்­முறை ஆன்­மி­கப் பய­ணம் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்துவிட்டு இந்­தி­யா­வுக்­குச் செல்­கின்­றார் என்­றால், நிச்­ச­யம் அவ­ரது பய­ணம் ஆன்­மி­கத்­துக்­கா­னது அல்ல. அர­சி­ய­லுக்­கா­னது. முத­ல­மைச்­ச­ராக மீண்­டும் தான் வரு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அவர் இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருக்­கின்­றார்.

காங்­கி­ரஸ் கொள்கை தவ­றுமா ?
இந்­தி­யா­வின் எடு­பி­டி­யாக விக்­னேஸ்­வ­ ரன் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­னால், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் அவரை ஏற்­றுக் கொள்­ளுமா? இதற்கு இல்லை என்றே பதில் கூற­லாம். ஒரு­வேளை, மாகாண சபைத் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­ட­மாட்­டோம் என்ற கொள்­கை­யில் நின்­றி­ருந்த காங்­கி­ரஸ், கொள்கை தவறி, – வழுவி, மாகா­ண­ ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­வெ­டுத்­த­ தைப் போன்று, இந்­திய எதிர்ப்பு நிலைப்­பாட்­டி­லி­ருந்து தன்னை மாற்­றிக் கொண்­டால், விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக காங்­கி­ரஸ் ஏற்­றுக் கொள்­ளும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்­த­லின்­போது விக்­னேஸ்­வ­ரன் ஒரு லட்­சத்து 32 ஆயி­ரத்து சொச்ச வாக்­கு­க­ளைப் பெற்­ற­வர். இப்­போது அவர் மீண்­டும் போட்­டி­யிட்­டால், அந்த வாக்கு எண்­ணிக்­கை­யைத் தாண்ட வேண்­டிய நிர்­பந்­தம் இருக்­கின்­றது. மக்­கள் செல்­வாக்­கா­னது, தனக்கு அப­ரி­மி­த­மாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது என்று விக்­னேஸ்­வ­ரன் நம்­பு­கின்­றார். அவர் நம்ப வைக்­கப்­ப­டு­கின்­றார். அதை ஏற்­றுக் கொண்டு அறிக்­கை­யும் விடு­கின்­றார்.

தனது வாக்­கு­வங்­கி­யில் சரிவு ஏற்­ப­டாது என்று உறு­தி­யாக விக்­னேஸ்­வ­ரன் நம்­பி­னால்­தான், அடுத்த தேர்­தல் களத்­தைச் சந்­திப்­பார்.
இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, வடக்கு மாகாண சபைத் தேர்­தல் நடக்­கும் வரை­யில், விக்­னேஸ்­வ­ரன் வடக்­கில் தாக்­குப் பிடிப்­பாரா என்ற மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான கேள்வி முக்­கி­ய­மா­ னது. வடக்கு மாகா­ண­சபை எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­தி­யு­டன் செய­லி­ழந்து விடும்.

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல், பெரும்­பா­லும் அடுத்த ஆண்­டின் நடுப் பகு­தி­யில் அல்­லது மார்ச் மாத இறு­திப் பகு­தி­யில் நடப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முண்டு. மாகா­ண­ ச­பை­கள் திருத்­தச் சட்­டம் நாடா­ளு­மன்­றுக்கு கொண்டு வரப்­பட்டு அது நிறை­வேற்­றப்­பட்டு, ஒன்­பது மாகா­ண­ச­பை­க­ளுக்­கும் ஒரே நாளில், விகி­தா­சார முறை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­டும்.

தாக்­குப் பிடிப்­பாரா விக்கி ?
முத­ல­மைச்­சர் பதவி இல்­லா­மல், வடக்கு மாகா­ணத்­தில் விக்­னேஸ்­வ­ரன் தாக்­குப் பிடித்து நிற்­பாரா ? விக்­னேஸ்­வ­ரன் பிறப்­பி­லி­ருந்து அர­சி­யல்­வாதி அல்லர். அவர் அர­சி­யல் வெற்­றிக்­காக அதி­கம் உழைப்­ப­வ­ரும் அல்லர். விக்­னேஸ்­வ­ரன் என்ற விம்­பத்தை வைத்து ஏனை­யோர் உழைத்­துக் கொடுக்க, அந்த வெற்­றியை மட்­டுமே ருசிப்­ப­வர் அவர். பதவி இழந்த பின்­னர் ஏனைய அர­சி­யல்­வா­தி­கள் போன்று விக்­னேஸ்­வ­ரன் இருப்­பாரா? இல்லை, தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர் என்ற பத­வியை வைத்­துக் கொண்டு, அடுத்த மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடக்­கும்­வரை இழுத்­துப்­பி­டிப்­பாரா ? இந்­தக் கேள்­விக்கு காலம்­தான் விடை சொல்­லும்.

விக்கி சாதித்­தது என்ன ?
விக்­னேஸ்­வ­ரன் வடக்­கின் முத­ல­மைச்­ச­ராக மீண்­டும் ஏன் தெரிவு செய்­யப்­பட வேண்­டும் ? முத­லா­வது பத­விக் காலத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஊடாக அவர் செய்­தது என்ன ? இந்­தக் கேள்­வி­க­ளுக்கு விடை காணப்­ப­ட­ வேண்­டும். வெறு­மனே, விக்­னேஸ்­வ ­ரன் என்ற விம்­பத்­தைத் தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­வ­தால் பயன் எது­வும் கிடைக்­கப் போவ­தில்லை.

வடக்கு மாகாண சபை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் வடக்கு மக்­கள் திருப்­தி­ய­டைந்­தி­ருக் கின்­றார்­களா? இந்­தக் கேள்­விக்­கான பதில், விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முதல்­வ­ராக்க வேண்­டுமா இல்­லையா? என்ற கேள்­விக்­கான விடை­யாக அமை­யும்.

மகிந்த ஆட்­சி­யின் கீழ், இரா­ணுவ அதி­கா­ரியை ஆளு­ந­ரா­கக் கொண்டே வடக்கு அரசு இயங்க ஆரம்­பித்­தது. பெரும் அடக்கு முறைக்கு மத்­தி­யி­லும், எரி­ம­லை­யாக வெடித்த மக்­கள், விக்­னேஸ்­வ­ரன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு அணிக்கு வெற்­றியை அள்­ளிக் கொடுத்­த­னர்.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைத்­தால், வடக்கு ஆளு­நரை மாற்­று­வோம், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வோம் என்று அந்த வேளை­யில் வாய்­கூ­சா­மல் வாக்­கு­றுதி வழங்­கி­னர். ஆட்­சிக் காலம் முடி­கின்ற இந்­தத் தறு­வா­யி­லும், வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வம் வெளி­யேற்­றப்­பட வேண்­டும் என்று விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை விட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்.

வடக்கு மாகாண சபை அமைக்­கப்­ப­டும்­போது தமிழ் மக்­க­ளுக்கு இரண்டு கன­வு­கள் இருந்­தன. நிர்­வாக ரீதி­யா­க­வும், அர­சி­யல் ரீதி­யா­க­வும் நாங்­கள் கொடி­கட்­டிப் பறக்­க­வேண்­டும். இங்கே அர­சி­யல் ரீதி­யாக விக்­னேஸ்­வ­ரன் சாதித்­தி­ருக்­கின்­றார். இனப்­ப­டு­கொலைத் தீர்­மா­னம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளில் அர­சி­யல் ரீதி­யாக விக்­னேஸ்­வ­ர­னும் சரி, வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ரும் சரி சாதித்­தி­ருக்­கின்­றார்­கள்.

இங்கே சாதித்­தி­ருக்­கின்­றார்­கள் என்று விளிப்­ப­தன்­மூ­லம் அதில் அவர்­கள் வெற்­றி­ய­டைந்­தார்­கள் என்­பது பொரு­ள­லல்ல. தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை உரிய வகை­யில் எடுத்­தி­யம்­பி­யி­ருக்­கின்­றார்­கள். அந்த வேண­வாக்­களை திரும்­பத் திரும்ப அழுத்­தம் திருத்­த­மாக எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்­றார்­கள். அந்த வேண­வாக்­க­ளி­லி­ருந்து தாம் ஒரு­போ­தும் தளம்­ப­வில்லை என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கின்­றார்­கள்.

நிர்­வா­கத் தோல்வி
மறு­பு­றம், நிர்­வாக ரீதி­யாக அவர்­கள் எதை­யும் செய்­ய­வில்லை. நிர்­வாக ரீதி­யான செயற்­பாட்­டுத் தோல்­விக்கு அர­சி­யல் மீது பழி­போட்டு விட்­டுத் தப்­பிக்­கும் உத்தி­யையே, வடக்கு அரசு கையாண்­டி­ருக்­கின்­றது. நிர்­வா­கத் தோல்­விக்கு பொறுப்­புக் கூறு­வ­தற்கு, வடக்கு முதல்­வரோ, அவர் தலை­மை­யி­லான அரசோ தயா­ரில்லை.

வடக்கு ஆளு­நர் ஒத்­து­ழைக்­க­வில்லை, வடக்கு தலை­மைச் செய­லர் ஒத்­து­ழைக்­க­வில்லை, வடக்கு அமைச்­சின் செய­லர்­கள் ஒத்­து­ழைக்­க­வில்லை என்று குரல் எழுப்­பி­னார்­கள். ஆட்சி மாற்­றத்­து­டன், வடக்கு அர­சு­டன் ஒத்­தோ­டக் கூடி­ய­வர்­கள் மேற்­படி பத­வி­க­ளுக்கு நிய­ மிக்­கப்­ப ட்­டார்­கள். அதன் பின்­ன­ரா­வது வடக்கு அர­சின் நிர்­வா­கம் திறம்­பட இயங்­கி­யதா ? எதை­யா­வது குறை­சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­றார்­களே தவிர, எதை­யும் செய்­ய­வில்லை.

இதற்­கு­மே­லாக, தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கக் கூடிய முத­லீட்­டுத் திட்­டங்­க­ளைப் புறம்­தள்ளி விட்­ட­து­தான், நிர்­வாக ரீதி­யாக வடக்கு அரசு சாதித்த விட­யம்.

எவரி­டம் ஒப்­ப­டைக்­கப்­போ­கின்­றோம்?
வடக்கு மாகாண அரசு இல்­லா­மல், ஆளு­நர் நிர்­வா­கத்­தின் கீழ் இருந்­தி­ருந்­தால், என்­ன­வெல்­லாம் நடக்­குமோ, அது­வே­தான் வடக்கு மாகாண அரசு இருந்­த­போ­தும் நடந்­தது. வடக்­கு­மா­காண அரசு என்ற ஒன்று, தனது புத்­தாக்க திட்­டங்­கள் எத­னை­யும் செய­லு­ருப்­ப­டுத்­த­வில்லை.

அவர்­கள் செய­லு­ருப்­ப­டுத்­த­வில்லை என்­ப­தை­விட புத்­தாக்க, திட்­டங்­கள் எது­வு­மின்றி, இயங்­கு­கின்ற அரச இயந்­தி­ரந்­து­டன் சேர்ந்து இயங்­கி­னார்­களே தவிர, ஓர் அர­சாக கொள்கை ரீதி­யாக எதை­யும் செயற்­ப­டுத்­த­வில்லை. விதி­வி­லக்­காக, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கான உத­வி­களை மாத்­தி­ரம் குறிப்­பிட முடி­யும்.

இந்­தச் சீத்­து­வக்­கேட்­டில், வடக்கு அர­சின் சுக்­கா­னைப் பிடித்­தி­ருந்த விக்­னேஸ்­வ­ர­ னி­டம் மீண்­டும் அதனை ஒப்­ப­டைப்­பது பொருத்­தமா? இங்கே விக்­னேஸ்­வ­ரன் சரி­வ­ரச் செயற்­ப­ட­வில்லை என்­பது ஒரு­பு­றம். அவ­ருக்கு வடக்கு அர­சின் உறுப்­பி­னர்­கள் ஒத்­து­ழைக்­க­வில்லை என்­பது மறு­பு­றம். ஆனால், வடக்­கின் அர­சின் உறுப்­பி­னர்­கள் ஒத்­து­ழைத்த காலத்­தி­லும் அவர் எத­னை­யும் செய்­தி­ருக்­க­வில்லை.

நிர்­வாக ரீதி­யி­லும், அர­சி­யல் ரீதி­யி­லும் ஆளு­மை­யான ஒரு­வ­ரி­டமே வடக்கு அர­சின் சுக்­கானை ஒப்­ப­டைப்­பது பொருத்­த­மாக இருக்­கும். இல்­லா­வி­டின், வடக்கு அர­சின் மீதான மக்­க­ளின் வெறுப்பு, தொடர்ந்து அதி­க­ரித்­துக் கொண்டே செல்­லும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!