2001ம் ஆண்டைப் போன்றே இந்த தடவையும் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எவ்வாறெனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்யும். மாற்று அரசியல் சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே செயற்பட முடியும் எனவும் சிறிய கட்சிகளக்கு வாக்களிப்பதில் பயனில்லை என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















