நியூ சவுத் வேல்சஸில் நயாகரா பார்க் எனும் இடத்திலுள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்தே மேற்படி தாய் குழந்தையுடன் குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தலையில் காயத்துக்குள்ளான எயிடன் என்ற 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
அதேசமயம் 43 வயது தாய் காயமடைந்த நிலையில் கடும் முதுகெலும்பு முறிவுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் குதித்த இடம் தரையிலிருந்து சுமார் 5 மீற்றர் உயரமானதாகும்.

















