தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் சபையில் ரணில் கோரிக்கை

ranil_unp

கொழும்பு துறை­முக நக­ரத்­திட்டம் தொடர்­பாக ஆராய்வ­தற்­காக தெரி­வுக்­கு­ழுவொன்று அமைக்­கப்­பட வேண்­டுமென எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொடி தலை­மையில் கூடி­யது.

சபையின் பிர­தான நட­வ­டிக்­கைகள் முடி­வ­டைந்­ததன் பின்னர் நிலை­யியற் கட்­டளை 23/2இன் கீழ் எதிர்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எழுந்­தி­ருந்த போது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­காக ஆளுந்­த­ரப்பு பிர­தம கொர­டாவும் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­தன தயா­ரானார்.

”இரண்டு கேள்­வி­க­ளுக்கு விரி­வான பதில்கள் வழங்­கப்­ப­ட­வி­ருப்­பதால் நேரத்தைக் கருத்­தில்­கொண்டு அவற்றை சபா­பீ­டத்தில் சமர்ப்­பிக்­கவா” என இதன்­போது எதிர்­கட்சித் தலை­வ­ரிடம் கேட்டார். ஆளுந்­த­ரப்பு பிர­தம கொர­டா­வான அமைச்சர் தினேஷ் குண­வர்­தன.

இதற்கு பதி­ல­ளித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­பீ­டத்தில் சமர்ப்­பிக்கும் அதே­வேளை ஹன்­சாட்­டிலும் உள்­ள­டக்­கு­மாறு கேட்­டுக்­கொண்டார். அத்­துடன் துறை­முக நக­ர­திட்டம் விவா­தத்­திற்கு வரும்­வ­ரையில் அது தொடர்ந்தால் ஆராய்­வ­தற்கு தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைக்­கு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

அதே­வேளை அர­சுக்கு எதி­ராக சபையில் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­காரம் தொடர்­பா­கவும் இதன்­போது எதிர்­கட்சித் தலைவர் கேள்­வி­களை எழுப்­பினார்.

இதற்கு பதில் வழங்­கிய அமைச்சர் தினேஷ் குண­வர்­தன,

மேற்­படி விட­யத்தை ஏப்ரல் 8ஆம் திகதி விவா­திப்­ப­தற்கு காலம் ஒதுக்­கப்­பட்­டது. ஒரு நாளில் இரவு 2.30 மணி­வரை விவா­திப்­ப­தற்கு யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

எனினும் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் இரண்டு நாட்களை கோருவதால் மே மாதம் அது சாத்தியமாகும். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விவாதமொன்றும் இருக்கின்றது என்றார்.

Tags: , , ,

Leave a Reply