இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என பாகிஸ்தான் சமர்ப்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளது.
இந்த யோசனைக்கு கியூபாவும், ரஸ்யாவும் ஆதரவளித்துள்ளன. எனினும், இந்த யோசனைக்கு அமெரிக்காவும் மொன்டன்கரோவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 நாடுகள் மட்டுமே வாக்களித்துள்ளன. எதிராக 25 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஆறு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

















