மத வன்முறைகள் நாட்டில் இல்லை :மஹிந்த ராஜபக்ஷ

Mahinda-Rajapaksa1நாட்டில் எந்­த­வொரு வடி­வத்­தி­லான அமை­தி­யின்­மைக்கும் நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். இங்கு மதங்கள் அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைகள் ஒரு­போதும் இருந்­த­­தில்லை. சில சம்­ப­வங்கள் இருந்­தி­ருக்­கலாம் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.
எனக்கு பேஸ்­புக்கில் 3 இலட்சம் விருப்­புக்­களும் டுவிட்­டரில் 25 ஆயிரம் பின்­பற்­று­னர்­களும் உள்ள நிலையில் நான் ஏன் அவற்றை தடை செய்­ய­வே­ண்டும்? எவ்­வாறு என்னால் அது முடியும்,? இவற்றை நான் தடை செய்தால் வீட்டில் மகன்­க­ளி­ட­மி­ருந்தே புரட்சி வந்­து­விடும் என்றும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கு இளை­ஞர்­களின் அனைத்து உரி­மை­க­ளையும் பயங்­க­ர­வாதம் பறித்­து­விட்­டது. அந்த உரி­மை­களை நாம் மீண்டும் பெற்­றுக்­கொ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.
உதா­ர­ண­மாக 2013 ஆம்­ ஆண்டின் சிறந்த கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சை பெறு­பேறு வடக்கில் இருந்தே வந்­தது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.
இலங்­கையில் நடை­பெற்­று­வரும் உலக இளைஞர் மாநாட்டை முன்­னிட்டு நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நடத்­திய டுவிட்டர் வழி­யான நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

நாட்டில் மத அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த டுவிட்டர் பதி­வுக்கே ஜனா­தி­பதி இந்த பதிலை வழங்­கி­யி­ருந்தார்.

பல்­வேறு கேள்­விகள் உல­க­ளா­விய மட்­டத்­தி­லி­ருந்து இந்த டுவிட்டர் நேர்­கா­ண­லுக்­காக பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க டுவிட்டர் நேர்­கா­ணலை ஒருங்­கி­ணைத்தார்.

டுவிட்டர் நேல்­கா­ணலின் ஊடாக ஜனா­தி­பதி அளித்த பதில்கள் வரு­மாறு

கேள்வி: உல­கத்­தி­லி­ருந்து இலங்­கையை இளைஞர் விவ­கா­ரத்தில் எது வித்­தி­யா­சப்­ப­டுத்­து­கின்­றது? எவ்­வ­கை­யான முன்­னேற்றம் இன்னும் தேவை என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்: சமா­தா­னத்தில் இளை­ஞர்­களே முக்­கி­ய­மா­ன­வர்கள். அவர்­க­ளுக்கு இல­வசக் கல்­வியும் முன்­னேற்­றத்­துக்­கான வழியும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: மேலைத்­தேய நாடுகள் எவ்­வாறு அர்ப்­ப­ணிப்­புடன் எதிர்­கால இளைஞர் விவ­கார பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­படும் என்று நீங்­களும் உங்கள் சகாக்­களும் நம்­பு­கின்­றீர்கள்?

பதில்: நாங்கள் எவ­ருக்கும் திறக்­கப்­பட்டே உள்ளோம். அதற்­கான சிறந்த சான்­றாக இந்த மாநாட்டை குறிப்­பி­டலாம்.

கேள்வி: விசேட தேவை­யுள்ளோர் எப்­போது இளைஞர் செயற்­பா­டு­களின் பிர­தான நிகழ்­சசி நிர­லுக்கு வரு­வார்கள்? ஏன் அவர்கள் எப்­போதும் புறந்­தள்­ளப்­டு­கின்­றனர்?

பதில்: மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்கு தொழில் வழங்­கு­வது தொடர்பில் எம்­மிடம் சட்ட ஏற்­பா­டுகள் உள்­ளன. நாம் அந்தக் கொள்­கையில் கடு­மை­யாக இருக்­கின்றோம். அண்­மையில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆறு­பேரை மத்­திய வங்கி ஆட்­சேர்ப்பு செய்­துள்­ளது.

கேள்வி :வேலை­யின்­மையை அதி­க­ரிக்­கக்­க­கூ­டிய இளை­ஞர்­களின் குறை­பா­டுகள் என்ன என்று கரு­து­கின்­றீர்கள்? விசே­ட­மாக இலங்­கையை பொறுத்­த­வரை?

பதில்: தொழில் சந்­தைக்கு தேவைப்­ப­டு­கின்ற திறமை முன்­வைக்­கப்­ப­டு­வதை நாம் காண­வில்லை. சில தவ­றான எண்­ணங்கள் கார­ண­மாக சந்­தையில் காணப்­ப­டு­கின்ற தொழி­லுக்கு இளை­ஞர்கள் அக்­கறை செலுத்­த­வில்லை என்­பது தெரி­கின்­றது.

கேள்வி :வடக்கு கிழக்கு யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட இளைஞர் யுவ­தி­களின் விசேட தேவையை நிறை­வேற்ற உங்கள் அர­சாங்கம் கருத்­திற்­கொண்­டுள்ள விட­யங்கள் என்ன?

பதில்: இந்த இளை­ஞர்­களின் அனைத்து உரி­மை­க­ளையும் பயங்­க­ர­வாதம் வௌியே எடுத்­து­விட்­டது. ஆந்த உரி­மை­களை நாம் மீண்டும் பெற்­றுக்­கொ­டுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். உதா­ர­ண­மாக 2013 ஆம்­ஆண்டின் சிறந்த கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சை பெறு­பேறு வடக்கில் இருந்தே வந்­தது. இது எமது வேலைத்­திட்­டத்தின் பிர­தி­ப­ல­னாகும்.
மேலும் தெற்கில் இருக்­கின்ற பாட­சா­லை­களில் வழங்­கப்­ப­டு­கின்ற அனைத்து வச­தி­களும் வடக்கு கிழக்கு இளை­ஞர்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றது. விசேட­மாக தகவல் தொழில் நுட்ப துறையில் இது செய்­யப்­ப­டு­கி­ன­றது.

கேள்வி: தீர்­மானம் எடுப்­பதில் இளை­ஞர்­களை பங்­கெ­டுக்­க­வைப்­ப­தற்கு உங்கள் அர­சா­ங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

பதில்: இளைஞர் பாரா­ளு­மன்றம் அதில் ஒன்­றாகும். ஒவ்­வொரு வரு­டமும் எனது வரவு செல­வுத்­திட்­டத்­திலும் நான் இளை­ஞர்­க­ளையும் பெண்­க­ளையும் கலந்­தா­லோ­சிப்பேன்.
பெண்கள் முன்­வைக்­கின்ற அதி­க­ம­ரான யோச­னைகள் வரவு செல­வுத்­திட்­ட­ததில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன. எனது அர­சாங்­கத்தில் மிக அதி­க­மான இளம் எம்.பி. க்கள் உள்­ளனர். ஏனைய அர­சியல் அமைப்­புக்­க­ளிலும் உள்­ளனர்.

கேள்வி :சட்­டக்­கல்­லூ­ரியின் வயது தடை­யா­னது இறுதி பரீட்­சைக்கு பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனை தீர்ப்­ப­தற்கு?

பதில்: அதனை நாம் கவ­னத்தில் எடுத்­துள்ளோம். வுிரைவில் இதற்கு தீர்வு ஒன்றை வழங்­கு­வ­தற்கு எதி்ர்­பார்­கின்றோம்.

கேள்வி: குறைந்த செலவில் கல்வி பெற்­றுக்­கொள்­வது அடுத்த முக்­கிய விட­ய­மாகும். இலங்­கையில்?

பதில் :எமது கல்­வித்­திட்­டத்தை நாம் பாரி­ய­ளவில் முன்­னேற்­றி­வ­ரு­கின்றோம். நாட்டில் சிறந்த 1000 பாட­சா­லை­க­ளுக்கு சிறந்த வச­திகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி: பல்­க­லை­க­ழக மாண­வர்கள் 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2500 ரூபா­வையே பெறு­கின்­றனர். ஏதா­வது அதி­க­ரிப்பை எதி­ர­பார்க்­க­லாமா?

பதில் :ஆம். நூம் தீவி­ர­மாக இந்த விட­யத்தை கருத்­திற்­கொண்­டுள்ளோம்.

கேள்வி: 10 வீத­மான மாண­வர்கள் உத­வி­களை பெறு­வ­தற்கு அதிகம் தகு­தி­யா­ன­வர்கள் என கணிப்­பீ­டுகள் கூறு­கின்­றன. இந்த மாண­வர்கள் கணி­ச­மான அதி­க­ரிப்பை பெறு­வார்கள்.

கேள்வி: பேஸ்புக் மற்றும் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலை­த­ளங்­களை தடை­செய்யும் நோககம் உள்ளதா?

பதில் :எனக்கு பேஸ்புக்கில் 3 இலட்சம் விருப்புக்களும் டுவிட்டரில் 25 ஆயிரம் பின்பற்றுனர்களும் உள்ள நிலையில் நான் ஏன் அவற்றை தடை செய்யவேண்டும்? ஏவ்வாறு என்னால் அது முடியும்,? இவற்றை நான் தடை செய்தால் வீட்டில் மகன்களிடமிருந்தே புரட்சி வந்துவிடும்.

கேள்வி :இந்த ஆசிர்வதிக்கப்பட்ட நாட்டில் மத அமைதியின்மையை மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.

பதில் :எந்தவொரு வடிவத்திலான அமைதியின்மைக்கு நான் இடமளிக்கமாட்டேன். இங்கு மதங்கள் அடிப்படையிலான வன்முறைகள் ஒருபொதும் இருந்தததில்லை. சில சம்பவங்கள் இருந்திருக்கலாம்.

Tags: , ,

Leave a Reply