யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று 07.10.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இதன்போது ஆசிரிய, ஆசிரியைகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்றுக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியுதவியில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான நினைவுப் பொருட்களை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு. லோகன் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

















