பிரேஸில் நாட்டைச் சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவர் தான் வளர்க்கும் ஆடு ஒன்றினை திருமணம் செய்யவுள்ளார்.
கல் அறுக்கும் தொழில் செய்த 74 வயதான அபரெசிடோ கஸ்டல்டோ என்ற முதியவரே தான் வளர்க்கும் ஆட்டினை திருமணம் செய்யப்போகிறார். இந்த ஆடு கார்மெலிடா என அழைக்கப்படுகிறது.
4 தடவைகள் 4 பெண்களை திருமணம் செய்து 4 பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகவுள்ள கஸ்டல்டோ தனது இறுதி நாள் வரை 2 வருடங்களாக தான் அன்பு செலுத்தும் ஆட்டுடன் வாழ்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இந்த ஜோடி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி ஜுன்டியய் நகரிலுள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் மனைவிகளை இழந்த கஸ்டல்டோ கூறுகையில், “நான் ஏதோ தவறு செய்வதாக சில கூறுகிறார்கள். ஆடு பேசாது, பொருட்கள் வாங்க பணம் கேட்காது மற்றும் கர்ப்பமும் தரிக்காது. அதனுடன் நிச்சயமாக உடலுறவில் ஈடுபடமாட்டேன் என நான் உறுதியாகக் கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக முதல் வழங்கிய ஆடையை கார்மலிடா சாப்பிட்டுவிட்டது. இருப்பினும் இரண்டாவதாக அதன் ஆடையை தெரிவு செய்துவிட்டது எனவும் கஸ்டல்டோ கூறியுள்ளார்.
திருமணத்தினையடுத்து பெரிய விருந்துபசார நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இந்த ஜோடியின் திருமணம் ஒரு முழு நிறைவான திருமணமாக இருக்காது என இத்திருமணத்தை நடத்தி வைக்கவுள்ள பிஷப் கூறியுள்ளார்.
















