இளம் விமானி ஒருவர் தான் செலுத்திய தொலைத்தூர கட்டுப்பாட்டுக் கருவி (ரிமோட் கொன்ட்ரோல்) மூலம் இயங்கும் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழக்க, அது அவரின் பறித்த பரிதாபகரமான சம்பவமொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
எவிட் ஆர்.சி ஹெலிகொப்டர் விமானத்தைச் செலுத்துவதில் ஆர்வமிக்க, நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரொமன் பிரையோஷெக் என்ற 19 வயதான இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
ஆர்.சி ரக சிறியளவிலான விமானங்களை தயாரித்து அபாயகரமான நுணுக்கங்களை செய்து பார்ப்பதில் ஆர்வமிக்க பிரையோஷெக், சம்பவ தினத்தன்று மாலைவேளையில் தனது ஆர்.சி 1500 மாதிரியினை செலுத்தியுள்ளார்.
இதன்போது ரிமோட் கட்டுப்பாட்டை இழக்க 6 இறாத்தல் நிறையுடைய விமானம் அவரது தலையில் வீழ்ந்துள்ளது. குறித்த ஹெலிகொப்டர் நிமிடத்திற்கு 2200 தடவைகள் சுற்றக்கூடிய 62 அங்குல நீளமான சுழலியைக் கொண்டது.
இதனால் அவரது மண்டையோட்டின் ஒரு பகுதியையும் கழுத்தையும், சுழலி வெட்ட அவ்விடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது அவரது தந்தையும் அங்கு இருந்துள்ளார்.
இவரே இப்பொழுதுபோக்கு பழக்கத்தை தனது மகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக பிரையோஷெக்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.ஆர்.சி ஹெலிகொப்டரில் தீவிரமாக ஈடுபட்ட இந்த இளைஞர் பல முறை தனது துணுக்குகளை யூ டியூப் இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















