ஒரே நாளில் 3ஆயிரம் வரையான படையினரைக் கொன்றதாக கூறுகிறார் கருணா!

ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் இராணுவத்தினரை தாம் கொன்றொழித்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விட கருணா அபாயமானவர் என கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும், தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!