பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

pakistan-attackவட­மேற்கு பாகிஸ்­தானில் பெஷாவர் நக­ரி­லுள்ள தேவா­ல­ய­மொன்றில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களில் 81 பேர் பலி­யா­ன­துடன் 100 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த சில வரு­டங்­களில் பாகிஸ்­தானில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­குதல் சம்­ப­வ­­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட வேளை அந்த தேவா­ல­யத்தில் சுமார் 400 பேர் வரை இருந்­த­தாக கூறப்படுகிறது. தாக்குதலையடுத்து குறித்த தேவாலயத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply