இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி: பரிசோதனையின்போது அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பின்னர் இறந்த அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அதற்கும் கொரோனா தொற்றியிருந்தது தெரியவந்தது.

ஆனால், குழந்தையின் மரணத்துக்கு காரணம் கொரோனாதானா என்பது தெளிவாக தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலில் இதேபோல் கொரோனா தாக்கிய ஒரு கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது நிகழ்ந்துள்ளது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!