பதவி விலகும் செய்தி பொய்!

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின.

எனினும், அவ்வாறான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதும் நீதி அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் செய்தி வெளியாகியிருந்தன.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மிடம் ஆலோசிக்காது செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்திருந்தார். நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!