அரசாங்கத்தின் கொள்கைளை விமர்சிக்கத் தடை! November 22, 2021 8:02 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரச மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்ய வேண்டாமென்ற கட்டளை, அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் சமூக ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அரச ஊழியர்களே முன்னெடுத்து வருகின்றனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.அந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்தே, மேற்கண்டவாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த கட்டளையை மீறினால், ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .பிரதேச செயலாளர்கள், அபிவிருந்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளிட்டவர்களே அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தினர் என்றும் அவ்வமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிறுவனங்களின் சட்டத்தின்படி, அரச ஊழியர்கள், அரசாங்கத்தை விமர்சனம் செய்யமுடியாது.அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைளை விமர்சிக்கும் அரச ஊழியர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம சேவகர்களுக்கு எதிரான முறைப்பாடுகளே அதிகமாகுமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…