புத்தாண்டையொட்டி சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரம்! December 29, 2021 8:50 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மாநகர காவல்துறை. அந்த அறிவிப்பில்,* புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும்.* மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடவேண்டாம்.* ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.* ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை, DJ, இசை நிகழ்ச்சிகளுக்கு தடை.* அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் ஒன்றுகூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.* மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையும், காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்லத் தடை.* 31ஆம் தேதி இரவு பைக் ரேஸ், அதிகவேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை.* ஹோட்டல்கள், தங்கும் வசதியுள்ள உணவு விடுதிகள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.* தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உணவு விடுதிகள் செயல்பட அனுமதி.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…