தமிழக முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! July 15, 2022 7:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க ஸ்டாலின் கடந்த 12ஆம் திகதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தனக்கு உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனை முடிந்து உடனடியாக அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…