ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்தால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்! ரணிலின் விசேட அறிவிப்பு

ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை குறைப்பது தொடர்பில் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நிகழும் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!