“மக்களின் வாழக்கை தரத்தை மாற்ற அரசு இரவு பகலாக உழைக்கிறது” – பிரதமர் மோடி! October 17, 2022 8:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- வங்கித்துறையில் அரசு இரு வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. ஒன்று வங்கிகளின் நிலையை வலுப்படுத்தி அதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்குவது. மற்றொன்று நாட்டின் குடிமக்கள் அனைவருக்கு வங்கிசேவைகளை கொண்டு சேர்ப்பது. அதன் முக்கிய நகர்வாகவே இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.ஏழைகளின் வீட்டு வாசலுக்க் வங்கிகளை கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்தியாவில் நகரம் முதல் கிராமம் வரை, ஷோரும் முதல் காய்கறி வண்டி வரை யுபிஐ பரிமாற்றத்தை பார்கலாம். சாதாரண மனிதர்களின் வாழக்கை தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இரவு பகலாக அரசு உழைக்கிறது என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…