கிழக்கு மக்கள் விரும்பினால் வடக்கு, கிழக்கு இணைப்பு நிச்சயம் இடம்பெறும். அதைத் தடுக்க முடியாது என வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்கும் தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸமில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது வெகுவாகப் பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் மக்கள், வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரவில்லை. ஒன்றாக இணைந்து வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இதேவேளை, வேலுப்பிள்ளை பிரபாகரன், கெப்பிட்டிப் பொலவைப் போன்றவர் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். எனினும் கெப்பிட்டிப்பொல நாட்டுக்கு துரோகம் செய்த வெளிநாட்டவர்களால் கொல்லப்பட்டார் என்றும் முஸமில் குறிப்பிட்டுள்ளார்.
















