சீனாவில் இரட்டை தலைகளுடன் பிறந்த பன்றிக் குட்டி

சீனாவின் ஜியாங்ஸி மாகாண தலைநகரான நன்சாங்கில் ஒன்றாக இணைந்த இரட்டைத் தலைகள், இரு மூக்குகள், இரு வாய்கள் மற்றும் 3 கண்கள் என்பவற்றுடன் விசித்திர பன்றிக்குட்டியொன்று பிறந்துள்ளது.

மேற்படி பன்றிக்குட்டியானது குறிப்பிட்ட பன்றியொன்றால் அண்மையில் ஈன்றெடுக்கப்பட்ட 10 குட்டிகளில் ஒன்றாகும்.

இந்தப் பன்றிக்குட்டி தாய் பன்றியிடமிருந்து எந்த வாயால் பாலை உறிஞ்சிக் குடிப்பது என்பதில் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாயால் பாலை உறிஞ்ச முற்படுகையில் மற்றைய வாயும் அப்பாலை உறிஞ்ச முற்படுவதால் இரு வாய்களாலுமே பாலை உறிஞ்ச முடியாத பரிதாபத்துக்கு அது உள்ளாகியுள்ளது.

மேற்படி பன்றிக்குட்டி உயிர் பிழைப்பது சிரமம் என மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: , ,

Leave a Reply