திருமணமான பின்னரே புதுமணப்பெண்ணின் நிஜ அழகை அறிந்த புதுமாப்பிள்ளை: விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை..!

இந்தியா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஷேக் மைதீன். இவருக்கும் முபீனா என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்னர், அன்று மாலை மாப்பிள்ளை மிகவும் வருத்தமுடன் காணப்பட்டார்.

இதுகுறித்து விளக்கம் கேட்ட மாப்பிள்ளையின் தாயார், திருமணத்திற்கு முன் புதுப்பெண் உண்மையான புகைப்படத்தை அளிக்கவில்லை என்று அறிந்து கொண்டார். தற்போது நேரில் பார்த்த போது, தனது மனைவி அழகாக இல்லை என்று வருத்தப்பட்டார்.

இதையடுத்து தாயார் சமாதானம் செய்தார். உடனே மருமகளுக்கு தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனாலும், மைதீனிற்கு சோகம் தாங்க முடியவில்லை. இந்நிலையில் இரவு, நண்பரின் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அச்சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.