பிரபாகரன் மீதான விசாரணையை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

Tamil-prapaசுற்­றுலா வீஸாவில் இலங்கை வந்து பாது­காப்­புடன் தொடர்­பு­டைய தளங்­களை படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட தமி­ழ­கத்தை சேர்ந்த மகாதமிழ் பிர­பா­கரன் கொழும்­பி­லுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் கட்­டுப்­பாட்டில் தடுத்து வைக்­கப்­பட்டு தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

வீஸா விதி முறை­களை மீறி செயற்­பட்­டமை, நாட்டின் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய தளங்­களை படம் எடுத்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்டின் கீழ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 24 வய­தான மகாதமிழ் பிர­பா­கரன் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்ட நிலை­யி­லேயே பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளி­யாகும் விப­ரங்­க­ளுக்கு அமை­வாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன குறிப்­பிட்டார்.

கைது செய்­யப்­பட்­டுள்ள நபரை நாடு­க­டத்­து­வது குறித்­தான எந்த தீர்­மா­னமும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் எந்த ஒரு நட­வ­டிக்­கை­யா­யினும் உள் நாட்டு சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­வாக மேற்­கொள்ளப் படும் என குறிப்­பிட்டார்.

கைது செய்­யப்­பட்­டுள்ள மகா தமிழ் பிர­பா­க­ர­னி­ட­மி­ருந்து பொலி­ஸாரால் மீட்­கப்பட்­டுள்ள நான்கு கம­ராக்­களில் இரா­ணுவ நிலைகள் மற்றும் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய படங்­களே காணப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந் நிலையில் சுற்­றுலா விஸாவில் இலங்­கைக்குள் வந்த ஒருவர் எதற்­காக நாட்டின் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய புகைப்­ப­டங்­களை எடுக்க வேண்டும் என விசாரணை செய்து வரும் பொலிஸார் மகா தமிழ் பிரபாகரன் மீதான விசாரணைகளில் வெளிப்படுத்தப்படவிருக்கும் தகவல்களுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை யினை மேற்கொள்ளவுள்ளனர்.

கிளிநொச்சி வேரவில் பகு­தியில் வைத்து கடந்த புதுன்­கி­ழமை இவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர், வட மாகா­ண­சபை உறுப்­பினர் பசு­ப­திப்­பிள்ளை ஆகி­யோ­ருடன் இவர் பயணம் செய்­தி­ருந்தபோதே படை­யி­ன­ராலும் பொலி­ஸா­ராலும் இவர்கைது செய்யப்­பட்­டி­ருந்தார்.

இவர் தமி­ழ­கத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்­சி­கையில் சுயா­தீன ஊட­க­வி­ய­லா­ள­ராகப் பணி­யாற்றி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

Tags: ,

Leave a Reply