சீனாவைச் சேர்ந்த நபரொருவர் இறப்பர் வளையங்களை தனது மூக்கால் ஊதி வெடிக்க வைக்கும் அபூர்வ ஆற்றலைப் பெற்று விளங்குகிறார். தென் மேற்கு சிசுவான் மாகாணத்தைச் சேர்ந்த நியி யொங்பிங் (61 வயது) என்ற மேற்படி நபர், டயர்கள் மீது 8 பேர் ஏறி நிற்க அவற்றை தனது மூக்கின் மூலம் காற்றை ஊதி பெரிதாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளார்.
வெதுப்பகமொன்றில் பணியாற்றி வரும் அவர், 8 வருடங்களுக்கு முன்னர் சீன மருத்துவர் ஒருவரிடம் தனது உடலில் ஏற்பட்ட பாதிப்பொன்றுக்கு சிகிச்சை பெற சென்றதையடுத்தே அவருக்கு மேற்படி அபூர்வ ஆற்றல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவர் இறப்பர் வளையமொன்றை சுமார் 20 நிமிடங்களில் ஊதி பெரிதாக்குகிறார்.
















