இங்கிலாந்தில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 5 பேருக்கு தலா 54 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் ஸ்டெனோ மிர்சா (18), ஹசன் அப்துல்லா (33), ரெனேடோ பலோக் (18), ஜன் காண்ட்ராக் (17) மற்றும் ராபர்ட் (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர்கள் 5 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். எனவே, இவர்களை கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில் இவர்கள் மேலும் பலரை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்தது.
எனவே வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவர்கள் 5 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது. மேலும், இவர்களுக்கு தலா 54 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
















