யாழிற்கு வருகை தந்துள்ள ஜேர்ஜன் மொகாட் தலைமையிலான ஜேர்மனிய குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தனர். நேற்று இரவு 8.30 மணியளவில் விடுதி ஒன்றில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனை குழுவினர் சந்தித்து தற்போதைய நிலமைகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
















