சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்த 55 வயது நபருக்கு விளக்கமறியல்

aresstதிருக்­கோவில் குடி­நிலப் பிர­தே­சத்தில் மூன்­றரை வயது சிறுவன் ஒரு­வனின் அந்­த­ரங்க உறுப்பை கடித்து காயப்­ப­டுத்­திய 55 வய­து­டைய ஒரு­வரை 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பொத்­துவில் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஐ.என்.றிஸ்வான் கடந்த புதன்­கி­ழமை உத்­த­ர­விட்டார்.

குடிநிப் பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்றில் சம்­ப­வ­தி­ன­மான செவ்­வாய்க்­கி­ழமை காலை 11.00 மணி­ய­ளவில் பாலர் பாட­சா­லைக்குச் சென்று வந்து தனி­மையில் இருந்த மூன்­றரை வயது சிறு­வனை அதே­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த 55 வய­து­டை­யவர் சிறு­வனை வீட்டுக்குள் கொண்டு சென்று மேசை மீது ஏற்­றி­வைத்து அவனின் அந்­த­ரங்க உறுப்பை கடித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சிறுவன் எழுப்­பிய சத்­தத்­தை­ய­டுத்து அவர் சிறு­வனை விட்­டு­விட்டு தப்பிச் சென்­றுள்ளார். தப்­பி­யோ­டி­ய­வரை கைது செய்­த­துடன் காய­ம­டைந்த சிறு­வன் வைத்­தி­ய­­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

Tags: , , ,

Leave a Reply