சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்து ஆய்வின் மூலம் அம்பலமான தகவல்!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று நேற்றல்ல, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது என்ற தகவல் ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் ராணுவ பிரிவில், அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் பெஞ்சமின் சுவைன் வார்டு, பீட்டர் எயர் கான்னர் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி, ‘மெமோய்ர் ஆப் தி சர்வே ஆப் தி ட்ரவாங்கூர், கொச்சின் ஸ்டேட்ஸ்’ (திருவாங்கூர், கொச்சி மாநிலங்களின் ஆராய்ச்சி நினைவுகள்) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி, 1893, 1901 ஆண்டுகளில் 2 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அந்த புத்தகத்தில், வயதான பெண்கள், சிறிய பெண்கள் (10 வயதுக்குட்பட்டவர்கள்) சபரிமலைக்கு செல்லலாம். ஆனால் பருவ வயதை அடைந்து, குறிப்பிட்ட காலகட்டம் வரையில் அங்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் எல்லா பாலுறவுகளும் செல்வது ஐய்யப்பனுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகும் என கூறப்பட்டுளள் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியதால் தற்போது சபரிமலை கோவிலில் சர்ச்சை நிலவு வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!