இந்த அரசாங்கத்தை தாமே காப்பாற்றியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதனை தாம் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சி கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தால் இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் தாம் அதiனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரை மட்டுமன்றில் படையினரின் கௌரவமான தொழிலையும் தாம் பாதுகாத்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே காணப்படுகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
















