அரசு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஒழுக்கத்தையும் சட்டத்திட்டங்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, அரச அதிகாரத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி வருகிறது என்று ஜே.வி.பியின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். அரசின் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக ஜே.வி.பியின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா, மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த, கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணாராச்சி ஆகியோர் நேற்று வியாழக்கிழமை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தேர்தல் சட்டங்களை அரசு பாரதூரமான வகையில் மீறி வருகிறது. இது சம்பந்தமாகவே தேர்தல் ஆணையாளருடன் பேசினோம். தங்காலையில் தொடங்கி தேர்தல் நடைபெறும் 6 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு ஊர்வலங்களையும் மனுக்களில் கையயழுத்து பெறும் வேலைத்திட்டம் ஒன்றையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வேறு மாவட்டங்களில் மேற் கொள்ளாது தேர்தல் நடை பெறும் மாவட்டங்களில் மாத் திரம் இவ்வாறான நடவடிக் கையில் ஈடுபடுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல். ஊர்வலங்களை நடத்த முடியாது. தேர்தலுக்கும் அழுத் தங்களை கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது. இது குறித்தே நாங்கள் தேர்தல் ஆணையாளருடன் பேசினோம். அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கை என்பதால் அதனைத் தடுத்து நிறுத்துவதாக தேர்தல் ஆணையாளர் எங்களிடம் தெரிவித்தார். அரசு வலுவற்ற நிலையில் உள்ளது. அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போயுள்ளது. மக்கள் ஆதரவு குறைந் துள்ளதால், அரசு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் என அரசில் உள்ள அனைவரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர் என்றார்.
















