உணவு ஒறுப்புப் போராட்டத்தில் நடிகர் சரத்குமார்!!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் தலைமையில் இன்று உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட 200 பேர் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை மைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!