வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

arrest

வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகணத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை தேடும் பணி என்ற நிலையில் பரவலாக சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று (21.3) இரவு 7 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதியில் வைத்து லோகநாதன் என்ற குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ணன் (வயது 8) மற்றும் லோ. கண்ணன் (வயது 6) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply