யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டமையைக் கண்டித்து மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

















