2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு கேட்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் உத்தேசம் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















