நைரோபியின் ஈஸ்ட்லேய் சுபாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகியதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் அதிகமாக சோமாலிய குடிமக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று மாலை பேருந்து நிலையம் மற்றும் உணவகம்ஒன்றின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த கைக்குண்டுகள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதோடு
காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கென்ய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

















