குழப்பத்தால் சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு!

அரசியல் நெருக்கடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற விடயங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் நாங்கள் தொடர்ந்து அந்த அரசாங்கத்தை கொண்டு சென்றிருக்கலாம். என்றாலும் நாட்டை முன்னிவைப்படுத்தியே இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டடோம். இருந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சி தனது தவறுகளை திருத்திக்கொண்டு செல்ல நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளாமல் நல்லமுறையில் ஆட்சியை கொண்டுசெல்லுங்கள். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தின் நல்ல விடயங்களை ஆதரிப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!