சிலியில் இன்று காலை ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வினை அடுத்து தற்போது ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தால் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















