குமரன் பத்மநாதனை அரசாங்கம் பட்டியலில் சேர்க்கவில்லை?

Kumaran-pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய காரணிகளுக்காக இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களின் பெயர்களையும் தடை செய்துள்ளது.எனினும், இந்த தடை செய்த பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 புலம்பெயர் அமைப்புக்களையும். 424 தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய தடையுத்தரவானது புகலிடக் கோரிக்கையாளர்களை மோசமாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடம் வழங்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களாக என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply