ஆசியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஜனாதிபதிக்கு 34ம் இடம்

mahindanew_CI

ஆசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் தொடர்பிலான பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34ம் இடம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆசிய விருதுகள் நிறுவனம் என்ற அமைப்பினால் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆசிய கண்டனத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களை இந்த நிறுவனம் பட்டியல் படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் அதிகளவில் இந்தியர்களும், சீனர்களும் இடம் பிடித்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதலாம் இடத்தை சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங் இரண்டாவது தடவையாகவும் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், சமயம், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு போன்ற துறைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் இரண்டாம் இடத்தை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பெற்றுக்கொண்டுள்ளார். இந்தப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை ராகுல் காந்தி பெற்றக்கொண்டுள்ளார்.பிரபல தென் இந்திய நடிகர் ரஜனி காந்த் இந்தப் பட்டியலில் 68ம் இடத்தையும் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 76ம் இத்iயும் வகிக்கின்றனர்.

Tags: , , ,

Leave a Reply