ஜெனிவா விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் இல்லையேல் பேராபத்து ; ஐ.தே.க.எச்சரிக்கை

Lakhsman_Kiriella_UNP

ஜெனி­வாவில் இலங்­கைக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே விசா­ர­ணை­களில் அர­சாங்கம் பங்­கேற்க வேண்டும். எமது நாட்டில் உள்ள சிறந்த சட்­டத்­த­ர­ணி­களின் உத­வியைப் பெற்று எம்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வாதாடி வெற்றி பெற­வேண்டும். இதன் மூலம்தான் எமது பக்க நியா­யத்தை முன்­வைக்க முடியும். அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட படை­யி­ன­ரையும் பாது­காப்­ப­துடன் நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க முடியும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யல்ல சபையில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஜெனிவா பிரே­ர­ணை­யா­னது நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்ட வழக்­கிற்கு சம­மாகும்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு எதி­ராக நீதி­மன்றம் அழைப்­பாணை அனுப்­பும்­போது நீதி­மன்றில் அவர் ஆஜ­ரா­க­வேண்டும் இல்­லா­விட்டால் நீதி­மன்றம் வழக்கை தனித்து விசா­ரித்து தீர்ப்பு வழங்கும். இதே­நி­லைதான் தற்­போது ஜெனி­வாவில் இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணையில் அர­சாங்­கம பங்­கேற்­கா­விட்டால் தனித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு தீர்பு வழங்­கப்­படும். விசா­ர­ணையில் கலந்­து­கொள்­ளா­விட்டால் சொத்­துக்­களை முடக்­கு­வது பயணத் தடை வெளி­நாட்டு முத­லீட்டு முடக்கம் போன்ற பொரு­ளா­தார தடை­க­ளுக்கும் நாடு முகங்­கொ­டுக்க நேரும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பெறு­ம­திசேர் .வரி உள்­நாட்டு அர­சிறை நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பொரு­ளா­தார சேவை அற­வீட்டு வரிகளின் திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு வாசிப்பு விவாத்தில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply