உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நபர்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் செக்குடியரசு முதலாம் இடத்தை வகிக்கின்றது.
இலங்கையைச் சேர்ந்த பிரஜைகள் அதிகளவில் மதுபமானம் அருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக இலங்கையில் மதுபான உற்பத்தியின் அளவும் உயர்வடைந்துள்ளன.
போதைப் பொருளுக்கு முற்றுபுள்ளி என்ற அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















