இலங்கையில் இதுவரையில் 153 பௌத்த விகாரைகள் மூடப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பௌத்த பிக்குகளின் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போது சமய வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அதற்கு பதிலாக சூதாட்ட மையங்கள், மதுபான நிலையங்கள் போன்ற விடயங்களே வளர்ச்சி அடைந்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் பௌத்த விகாரைகளை பேணி பாதுகாக்க வேண்டிய பௌத்த துறவிகள் தற்போது பதவி ஆசையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















