அவுஸ்த்ரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முதல் வந்த புகலிடக் கோரிக்கையலர்களின் விசாக்கள் முடிவடைந்த நிலையில் பலருக்கு இதுவரைக்கும் விசா புதுப்பிக்க படாத நிலையில் இருக்கின்றது .
தற்போது நடைமுறையில் உள்ள BVE என்னும் நிபந்தனை அடிப்படையிலான விசாவில் பல பிரச்சனைகள் உள்ளத்தால் எதிர் கட்சிகள் வழக்கறிஞ்சர்கள் அகதி செயற்பட்டாளர்கள் என பல தரப்பு செயற்பட்டலர்களும் இந்த விசாவை மாற்றக்கோரி பல எதிர்ப்புகளை தெரிவித்தனர் .
கடந்த மாதம் செனட் சபையிலும் நிரந்தர வதிவிட வீசா வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் டோனி அபட் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையளர்கள் தொடர்பில் அவர்களுடைய கடும்போக்கு தன்மையை கைவிடவில்லை .
மீண்டும் புகலிட கோரிக்கையலர்களுக்கு 1 வருடத்துக்கு நிபந்தனை அடிப்படை வீசாவான BVE வீசாவே வழங்கப்பட்டுள்ளது .
அவுஸ்த்ரேலியா அரசாங்கம் மீண்டும் புகலிடக்கோரிக்கை யாளர்களை நடத்தும் விதம் மிகவும் கவலை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
















