தனது மகள் ஜெயபிரதாவின் மகன் சித்துவை காதலிப்பதாக சிம்பு தான் செய்தியை பரப்பிவிடுவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம். வாலு படப்பிடிப்பில் ஹன்சிகா சிம்பு மீது காதல் வயப்பட்டார். ஆனால் ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானிக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இந்நிலையில் வாலு படப்பிடிப்பு முடிவதற்குள் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்துவிட்டனர். இந்த காதல் முறிவால் மோனா தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
ஹன்சிகாவுக்கும் ஜெயபிரதாவின் மகன் சித்துவுக்கும் காதல் என்ற செய்தி தீயாக பரவியது. இதை கேட்ட ஹன்சிகா பதறி அடித்து மறுப்பு தெரிவித்தார்.
தனது மகளின் பெயரை கெடுக்க சிம்பு தான் இது போன்ற காதல் செய்திகளை பரப்புவதாக ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி கடுப்பில் உள்ளாராம்.
சித்துவுக்கு ஏகப்பட்ட சொத்து இருப்பதால் தான் ஹன்சிகா அவரை காதலிக்கிறார் என்ற செய்தியும் பரவியுள்ளது. அதற்கு மோனா, மும்பையில் எங்களுக்கு இல்லாத சொத்தா. நாங்களே ஜமீன் குடும்பத்தினர் தான் என்று கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்பு தனது காதல் தோல்வி அடைந்தால் தான் காதலித்த பெண்கள் பற்றி வதந்தியை பரப்பி விடுவதும், அவர்கள் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















