கடனட்டை மோசடியில் ஈடுபடும் கும்பலை கைதுசெய்ய பொது­மக்­களின் உத­வி­யை கோரு­கி­றது புல­னாய்வுப் பிரிவு

droberyபிற­ருக்கு சொந்­த­மான இலத்­தி­ர­னியல் அட்­டை­களை பயன்­ப­டுத்தி சட்ட விரோ­த­மான முறையில் ஏ.ரீ.எம். நிலை­யங்கள் உள்­ளிட்­ட­வற்றில் கொடுக்கல் வாங்கல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வந்த பல சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான தக­வல்கள் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன.

குற்றப் புல­னாய்வுப் பிரிவில் நபர் ஒருவர் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய அதனை விசா­ரணை செய்து வந்த பொலி­ஸா­ருக்கே இந்த சந்­தேக நபர்கள் தொடர்பில் தக­வல்கள் கிடைத்­துள்­ளன. இந் நிலையில் சந்­தேக நபர்­களை கைது செய்ய பொது மக்­களின் உத­வியை பொலிஸ் தலை­மை­யகம் கோரி­யுள்­ளது.

இவ்­வாறு பிற­ருக்கு சொந்­த­மான இலத்­தி­ர­னியல் அட்­டை­களைப் பயன்­ப­டுத்தி கொடுக்கல் வாங்­கல்­களில் ஈடு­பட்­டு­வரும் நபர்­களை அடை­யாளம் காணும் வித­மாக பல்­வெறு சீ.சீ.ரீ.வி.கம­ராக்­களில் பதி­வான காட்­சி­களை புல­னாய்வுப் பிரி­வினர் பெற்­றுள்­ள­தாக குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன அந்த சந்­தேக நபர்­களை கைது செய்ய பொது மக்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் என குறிப்­பிட்டார்.

அத்­துடன் அந்த சீ.சீ.ரீ.வி.பதி­வுக்­காட்­சி­களை கேச­ரிக்கு வழங்­கிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹனஇ படங்­களில் உள்ள சந்­தேக நபர்­கள் தொடர்­பி­லான தக­வல்கள் கிடைப்பின் அதனை 0112422176, 0112326670 அல்­லது 0112320141 முதல் 145 வரை­யி­லான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கோ 0112380380 என்ற தொலை நகல் இலக்­கத்­திற்கோ அறி­விக்­கு­மாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply