வாள்வெட்டுக் குழு மீண்டும் அடாவடி! – அடக்கி விட்டதாக கூறிய பொலிசுக்கு சவால்.

யாழ்ப்பாணம், உடுவில்- ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 10 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு, அங்கிருந்த உடமைகளை அடித்து சேதமாக்கி விட்டு, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரே தாக்குதலை மேற்கொண்டதாகவும், தாக்குதலாளிகள் தப்பி செல்லும் போது தாம் கொண்டு வந்திருந்த வாள் ஒன்றினை தவற விட்டுள்ளதாகவும், வீட்டில் இருந்தோர் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ யாழ்ப்ப்பாணத்தில் இயங்கிய வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அறிவித்திருந்தார் என்பது குரிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!