திமுகவின் தலைமை என்னை அழைத்தால் திமுகவில் மீண்டும் இணைவேன் என அழகிரி தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தேர்வில் கருணாநிதியின் தலையீடு இல்லாமல் ஒருவர் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுத்ததே திமுகவின் தோல்விக்கு காரணம்.
திமுக தலைமை மீண்டும் அழைத்தால், எனது நிபந்தனைகளை தலைமை ஏற்றால் மீண்டும் திமுகவில் இணைய தயாராக உள்ளேன்,
அத்துடன் திமுக தலைவர் கருணாநிதியையும் விரைவில் சந்திக்க உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















