புதிய அமைச்சரவையில் நம்பிக்கையில்லை..!

புதிய அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினை ஏதுவும் தீரப்போவதுமில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இவ்வாறன விடயங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி வேண்டிக்கொண்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!