கடந்த கால அரசின் தவறுகளைத் திருத்துவேன்- மைத்திரி!!

கடந்த அரசில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தி, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கே, கூட்டரசுக்கு மக்கள் அதிகாரங்களை வழங்கியுள்ளனர் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழல் மோசடி அற்ற வகையில் நாட்டை சிறந்த முறையில் கொண்டுச் செல்ல தற்போதைய அரசு தயாராக உள்ளது.

தொழிலற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க ரணசிங்க பிரேமதாஸ நடவடிக்கை மேற்கொண்டார். அதுபோல், தனியார் துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.- என்றார்.

நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் , பிரதியமைச்சர் பலரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!