இந்தியாவில் நரேந்திர மோடி அல்ல; எந்தவொரு பலமான அரசாங்கம் வந்தாலும் இலங்கையானது 10 ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட நாடு என்பதனை முதன்மையாக வெளிக்காட்டுவோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நரேந்திர மோடி இதுவரை வெளிவிவகார அமைச்சரை நியமிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்பட்டதும் அவர்கள் இலங்கை விவகாரத்தில் முன்வைக்கும் விடயங்களை வைத்தே எமது பதில்கள் அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இந்தியாவில் கடந்தகால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பொருளாதாரம் 8 வீதத்துக்கு வந்தது. இறுதி காலப்பகுதியில் 5.5 வீதமாக பதிவாகியது. மேலும் பல்வேறு பிரதேசங்களை காங்கிரஸ் அரசாங்கம் சிறப்பாக அபிவிருததி செய்தது. ஆனால் ஊழல் மோசடி காரணமாக அந்தக் கட்சி இம்முறை தோல்வியடைந்துள்ளது.
மேலும் தொகுதி முறை தேர்தல் காரணமாகவே மோடி தலைமையிலான கட்சி இவ்வாறான பாரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதேச வாரி தேர்தல் முறையாக இருந்திருந்தால் மோடிக்கு 206 ஆசனங்களே கிடைத்திருக்கும் என்பதனையும் இந்த இடத்தில் குறிப்பிடுகின்றோம்.
நரேந்திர மோடி இதுவரை வெளிவிவகார அமைச்சரை நியமிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்பட்டதும் அவர்
கள் இலங்கை விவகாரத்தில் முன்வைக்கும் விடயங்களை வைத்தே எமது பதில்கள்அமையும்.
ஆனால் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பலமான அரசு அல்ல, எந்தவொரு பலமான அரசாங்கம் வந்தாலும் இலங்கையானது 10 ஆயிரம் வருடங்கள் வரலா
ற்றை கொண்ட நாடு என்பதனை முதன்மையாக வெளிக்காட்டுவோம்.
















