எங்களுடைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்படுத்துகின்ற பொழுது அரசாங்கம் அரசியல் ரீதியாகப் பார்ப்பதையும் கொச்சைப்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதேவேளை நாம் வெளியில்ஒன்று கூடினால் அதற்கு அரசாங்கமும் இராணுவமும் தடை விதிக்கின்றது. இதனால் நாம் இக்கறுப்புப்பட்டிகளை அணிந்துள்ளோம் என
வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் ஒன்பதாவு அமர்வு நேற்று நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு கறுப்புப்பட்டி அணிந்து அஞ்சலி செலுத்திய பின்
னர் அவைத் தலைவரின் அழைப்புக்கு அமைய இம்மக்களுக்கான அஞ்சலி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் நீத்தார்கள். எத்தனையோ பேர் எப்பொழுதுஇ எதற்காகஇ எப்படி என்பது சம்பந்தமாக சர்வதேசம் விசாரணை செய்ய இருக்கின்றது. அது ஒருபுறமிருக்க எங்களைப் பொறுத்தவரையிலே எங்களுடைய உறவுகள் திடீரென பெருவாரியாக அன்று உயிர்நீத்ததை நாங்கள் நினைவு படுத்தியே எங்களுடைய அஞ்சலிகளையும் மனத் துயரங்களையும் மனவருத்தங்களையும் தெரிவித்து அந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக தீபங்கள் ஏற்றியும் எமது எண்ணங்களை வெளிப்படுத்தியும் வருகின்றோம்.
இது சம்பந்தமாக அண்மைக்காலத்தில் பல முரண்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. இதில் விசித்திரம் என்னவென்றால் இறந்தவர்களுக்காக எங்களுடைய மன நிலையை வெளிப்படுத்துவதை அரசாங்கம் வித்தியாசமாக எடுத்துக் கொள்கின்றது. இறந்தவர்கள் மீண்டும் வந்து விடுவார்கள் என்று பயத்திலோ என்னவோ இராணுவமும் அரசாங்கமும் நாங்கள் எங்கெல்லாம் தீபம் ஏற்றுகின்றோமோ அங்கெல்லாம் வந்து அவற்றை அணைப்பதும்இ அது சம்பந்தமாக மக்களைக் கைது செய்து செல்வதும் தற்பொழுது சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இது ஒருதேவையற்ற விடயமாகும். இறந்தவர்கள் தொடர்பாக எங்களுடைய மனோநிலையையே நாம் வெளிப்படுத்துகின்றோம். அதை ஒரு அரசியல் விடயமாக மாற்றிக் கொள்வது அவ்வளவு சரியில்லை என்றே எனக்குப்படுகின்றது. அதே நேரத்தில் ஆலயங்களில் நாங்கள் ஏற்ற வேண்டிய தீபங்களை அரசியல் அரங்கங்களுக்குக் கொண்டு வந்து தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற அவசியமும் இல்லை எனவும் நாம் கருதுகின்றோம். எங்களுடைய மனோ நிலைகளை நாங்கள் இறந்தவர்கள் சம்பந்தமாக வெளிப்படுத்துவதா
னால் பல விதங்களில் அதைச் செய்யலாம்.
ஆலயங்களுக்குச் செல்லலாம். பூசைகள் செய்யலாம். அதேநேரம் அவர்கள் சார்பாக வறியவர்களுக்கும்இபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை வழங்கலாம்.
தற்பொழுது வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவகையான உதவிகளும் தரப்படவில்லை. வழங்கப்பட்ட உதவிகளையும் அவர்கள் தடைபோட்டு நிறுத்திவிட்டார்கள்.
அம் மக்களுக்கு மிக அண்மையிலே நாம் உதவிகளைச் செய்துள்ளோம். இறந்தவர்கள் தொடர்பில் எமது மனநிலையை வெளிப்படுத்த இத்தகையவர்களுக்கு உதவிகளை வழங்
கலாம். அதை விடுத்து இவற்றை அரசியலுக்குப் பாவிப்பது அவ்வளவு சரியானதாக எனக்குத் தெரியவில்லை. அதற்காக எமது மனோ நிலையை வெளிப்படுத்தாமலும் இரு
க்கமுடியாது.
ஆயிரமாயிரம் மக்கள் ஒருமித்து ஓரிரு நாட்களிலேயே இறந்து போவதற்கு காரணம் என்னவென அரசியல் ரீதியாக வெளிநாட்டு நிறுவனங்கள் அறிந்து எமக்குத் தெரிவிக்க இருகின்றார்கள். அது எவ்வாறு இருப்பினும் மக்களுடைய மனோ நிலையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது.
வெளியில் நாங்கள் கூடினால் அதற்கு அரசாங்கம் தடை விதிக்கின்றது. இராணுவம் தடை விதிக்கின்றது. அதனால் தான் நாங்கள் இன்று இக்கறுப்புப் பட்டிகளை அணிந்துஇ மிகவும் மனவேதனையை வெளிப்படுத்துகின்றோம்.
அதாவது எமது இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்படுத்துவதை அரசாங்கம் அரசியல் ரீதியாகப் பார்ப்பதையும் அரசாங்கம் கொச்சைப்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்ற அடிப்படையிலேதான் நாம் இன்று கறுப்புப்பட்டி அணிந்து இங்கு வந்துள்ளோம். எல்லோர் சார்பாகவும் இந்த மனோ நிலையை நாம் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என்றார்.
















